நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இந்தி நடிகைகள்

வியாழன், 26 மே 2016 (14:39 IST)
தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் நடிகைகளைவிட பல மடங்கு அதிகம் இந்தி நடிகைகள் சம்பளம் பெறுகிறார்கள்.


 


இங்கு முதலிடத்தில் இருக்கும் நயன்தாரா 2.5 கோடிகள் சம்பளம் வாங்குகிறார். அதேநேரம் இந்தியின் முன்னணி நடிகை கங்கனா ரனவத் 11 கோடிகள் சம்பளம் பெறுகிறார்.
 
கங்கனா ரனவத் பெரும்பாலும் நாயகி மையப் படங்களில் நடிக்கிறார். அவை ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வசூலிக்கவும் செய்கின்றன. அதனால் இந்த சம்பளம் அவருக்கு தரப்படுகிறது.
 
கங்கனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் கரீனா கபூர் 10 கோடிகள் பெறுகிறார். தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் தலா 9 கோடியும் வித்யாபாலன், கத்ரினா கைப் ஆகியோர் தலா 7 கோடியும் அனுஷ்கா சர்மா 6 கோடியும் அலியாபட் 5 கோடியும் சோனாக்சி சின்ஹா 4 கோடியும் சம்பளம் வாங்குகிறார்கள்.
 
இந்திப்பட உலகின் சந்தை பெரியது என்பதால் இந்த பெரிய தொகை சம்பளமாக நடிகைகளுக்கு தரப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்