40 நாளில் 100 கோடி - அசத்தும் ப்ரியங்கா

வியாழன், 26 மே 2016 (15:04 IST)
ப்ரியங்கா சோப்ரா 40 நாள்கள் விளம்பரப் படங்களில் நடிக்க 100 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளார். 


 


குவாண்டிகா ஆங்கில தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஆரம்பித்த பின் ப்ரியங்கா சோப்ராவின் புகழ் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. அமெரிக்காவின் பீப்பிள் சாய்ஸ் விருது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சியாளராக பங்கேற்பு, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் விருந்து என்று ப்ரியங்காவின் கிராப் தொடர்ந்து ஏறுமுகத்தில். 
 
இந்த சர்வதேச புகழ் காரணமாக ப்ரியங்காவை விளம்பரப் படங்களில் நடிக்க வைக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. 24 நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்க ப்ரியங்கா ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்த 24 நிறுவனங்களின் விளம்பரப்படங்களில் தொடர்ச்சியாக 40 தினங்கள் நடிக்க உள்ளார். இதன் மூலம் 100 கோடி ரூபாய் ப்ரியங்காவுக்கு சம்பளமாக கிடைக்க உள்ளது.
 
இதன் மூலம் இந்தியாவில் விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நடிகை என்ற பெருமை ப்ரியங்கா சோப்ராவுக்கு கிடைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்