உலுபெரியா உத்தர் என்கிற ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்த தொகுதியில், தபன் சர்கார் என்கிற செக்டார் 17-ன் அதிகாரி, தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தும் ரிசர்வ் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன், உறவினர் ஒருவரின் வீட்டில் உறங்கச் சென்றிருக்கிறார்.
மேலும், பிடிபட்ட வாக்குப் பதிவு இயந்திரம், செயல்பாட்டில் இருக்கும் இயந்திரங்கள் பழுதாகும் போது மாற்றி பயன்படுத்துவதற்காக வைத்திருந்த இயந்திரம் என்றும், அவ்வியந்திரம் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படாது எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் பார்வையாளர் நீரஜ் பவன், அவ்வியந்திரங்களில் சீல் உடைக்கப்பட்டிருக்கிறதா என சரி பார்த்து, அதை தனியாக தேர்தல் பார்வையாளரின் கட்டுப்பாட்டில் ஒரு தனி அறையில் வைத்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.