பாஜகவில் இணைந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

புதன், 3 மார்ச் 2021 (07:40 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் மற்றுமொரு எம்பி சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் மேலும் சில எம்எல்ஏக்களை பாஜக இழுக்க முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். அந்த குற்றச்சாட்டு உண்மை என்ற வகையில் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ திடீரென விலகி பாஜகவில் இணைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள திரிணாமுல் கட்சியில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஜிதேந்திர திவாரி. இவர் நேற்று ஸ்ரீரம்பூர் என்ற மாவட்டத்தில் நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் என்பவர்  முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் 
 
ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் எம்பிக்கள் பாஜகவுக்கு சென்றுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு எம்எல்ஏ பாஜகவில் இணைந்து உள்ளது மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் மார்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 8 கட்டங்களாக மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்