யுக்ரேன் போர்: ரஷ்ய வீரர்கள் 26, 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம்

புதன், 11 மே 2022 (18:07 IST)
ரஷ்யா ராணுவ வீரர்கள் இதுவரை 26, 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று யுக்ரேன் தெரிவித்துள்ளது.


யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து தற்போது வரை ரஷ்ய படை வீரர்கள் 26, 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் ரஷ்ய ராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது. இதன்படி, ரஷ்யாவின் 1, 187 டாங்கிகள், 2, 856 ஆயுத வாகனங்கள், 199 ஏர் கிராப்ட், 160 ஹெலிகாப்டர்கள், 290 ஆளில்லா தாக்குதல் விமானங்கள், 12 கப்பல்கள் உள்ளிட பல்வேறு ராணுவ தளவாடங்களை அழித்துள்ளதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.

யுக்ரேன் வெளியிட்டுள்ள இந்த தகவலை பிபிசி சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்