லெபனான் நாட்டின் தூதர் வெளியேற செளதி அரேபியா உத்தரவு

சனி, 30 அக்டோபர் 2021 (12:29 IST)
செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யேமனில் ஆக்கிரமிப்பாளராக இருப்பது போலத் தோன்றுகிறது என, லெபனான் நாட்டின் தகவல் துறை அமைச்சர் கடந்த வாரம் ஒளிபரப்பான நேர்காணல் ஒன்றில் கூறினார்.
 

ஆனால் அந்த நேர்காணல் கடந்த ஆகஸ்ட் மாதம், அவர் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டது.
 
மேலும் யேமன் நாட்டில் செளதி அரேபியா முன்னெடுக்கும் ராணுவ நடவடிக்கைகள் பலனற்றவை என்றும், ஹூதி கிளர்ச்சிக் குழுவினர் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் லெபனான் தகவல் துறை அமைச்சர் ஜார்ஜ் கோர்தாஹி அந்நேர்காணலில் கூறி இருந்தார்.
 
இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், செளதி அரேபியாவில் உள்ள லெபனான் நாட்டின் தூதரை அடுத்த 48 மணி நேரத்துக்குள் வெளியேற உத்தரவிட்டுள்ளது செளதி அரேபியா.
 
கொர்தாஹியின் கருத்து லெபனான் அரசின் நிலைப்பாடு அல்ல என விளக்கமளித்தது லெபனான் தரப்பு. மேலும் செளதியின் இந்த முடிவு வருத்தமளிப்பதாகவும், செளதி இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யும் என நம்புவதாகவும் கூறியுள்ளார் லெபனா பிரதமர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்