சுவீடனில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு

வியாழன், 26 ஏப்ரல் 2018 (15:23 IST)
கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சுவீடனில் பெரிய அளவிலான படுகொலைகள் நடந்ததற்கான ஆதாரங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சேண்ட்பி மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு பிறந்த குழந்தை உள்பட பலர் கொல்லப்பட்டதாகவும், அந்த மாளிகையில் 200 முதல் 250 பேர் வரை வசித்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
 
எனினும், இந்தக் கொலைகளுக்கு காரணமானவர்கள் யாரென்று தெரியவில்லை. 

 
இரான் தலைநகர் டெஹ்ரான் அருகே கடந்த திங்களன்று கண்டெடுக்கப்பட்ட 'மம்மி' இஸ்லாமியப் புரட்சிக்கு முன்பு இரானை ஆட்சி செய்த பஹ்லாவி அரச குடும்பத்தை சேர்ந்த கடைசி மன்னரின் தந்தையாக இருக்கலாம் என்று அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
மன்னர் ரேசா ஷா பஹ்லாவியின் கல்லறை 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு அழிக்கப்பட்டது. எனினும், அவரது இறந்த உடலின் எச்சங்கள் என்ன ஆயின என்று தெரிந்திருக்கவில்லை.
 
ரேசா ஷா நிறுவிய பஹ்லாவி அரச குடும்பம் 1925 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரானை (அப்போது 'பெர்சியா' என்று அழைக்கப்பட்டது) ஆட்சி செய்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்