சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற விடமாட்டோம். மு.க.ஸ்டாலின்

செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (04:13 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் உள்ளார். அவரது ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தமிழகத்தில் அமைந்துள்ளதால் சசிகலா பெங்களூரில் சிறையில் உள்ள தன்னை சென்னை சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளாராம்



சட்டப்பட்டி இருமாநில ஜெயிலர்களும் ஒப்புக்கொண்டால் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற எந்த தடையும் இல்லை என்றாலும் யாராவது நீதிமன்றத்தில் முறையிட்டால் சிக்கல் ஏற்படும்.

இந்நிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் பேட்டி அளித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் 'சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதை நாங்கள் சட்டரீதியாக தடுப்போம். இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிடுவோம்' என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை போட்டவர்களில் ஒருவராகிய க.அன்பழகன் திமுகவில் இருப்பதால் அவரது சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தால் சசிகலா சென்னை சிறைக்கு மாற்றப்படுவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்