தென்மேங்கு வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடையும் வாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :
வெப்துனியாவிற்கு கடந்த 6, 11 ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுபடி தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்துள்ளது. டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் மழை பெய்து வருகிறது.
தற்போதைய வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடையும் வாய்ப்புள்ளது. இதனால் டிசம்பர் 19ஆம் தேதி வரை காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும், பெரும்பாலான வட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நிலநடுக்க தேதி கணிப்பின்படி டிசம்பர் 20 ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் இந்தோனேஷியா அல்லது ஜப்பானில் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவின் வட பகுதியிலும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்டிருந்த படி, ஒரு நாள் முன்னதாக சாண்விட்சில் 6.5 ரிக்டரும், பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டரும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று மழைராஜ் தெரிவித்துள்ளார்.