கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

சனி, 5 பிப்ரவரி 2011 (14:17 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்புள்ளதால், தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

கடந்த ஒரு மாதத்திற்கு மேல் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்நிலையில் பிப்ரவரி 4ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகைக்கு தென் கிழக்கு திசையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.

இதனால் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நிலநடுக்க தேதி கணிப்பின்படியும், வானிலை கணிப்பின்படியும் பிப்ரவரி 10, 17ஆம் தேதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்