விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசியதால்…பாலியல் அச்சுறுத்தல் – நடிகை வேதனை !

சனி, 6 பிப்ரவரி 2021 (21:10 IST)
டெல்லியில் தொடர்ந்து போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாப் பாடகி ரிஹானா, கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட பல்வேரு பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக ஒவ்வொரு முறை பேசும்போதும், தனக்குப் பாலியல் அச்சுறுத்தல் வருவதாக இங்கிலாந்து நடிகை ஜமீலா ஜமீல் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இங்கிலாந்து நடிகை ஜமீலா ஜமீல் இன்ஸ்டாவில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், நான் இந்தியாவில் விவசாயிகளுக்காக தொடர்ந்து பேசிவருகிறேன். அப்படி ஒவ்வொரு முறை பேசும்போது, பாலியல் அச்சுறுத்தல் வருகிற்து எனக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்கும்போது, நான் ஒரு மனிதன் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்