தன் குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக வெளியிட்ட சினேகா !

திங்கள், 9 மார்ச் 2020 (11:52 IST)
நடிகை சினேகாவுக்கு கடந்த மாதம் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில் இப்போது முதன் முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக பட்டாஸ் திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமானார். இந்நிலையில் ஜனவரி 24 ஆம் தேதி  சினேகாவுக்கு இரண்டாவதாக மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

இதுவரை குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த அவர் முதன் முதலாக டிவிட்டரில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்