சிவகார்த்திகேயனின் அடுத்த மூன்று படங்கள் குறித்த தகவல்: இயக்குனர்கள் யார் யார்?

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (08:53 IST)
சிவகார்த்திகேயன் தற்போது 'கோலமாவு கோகிலா' நெல்சன் இயக்கத்தில் 'டாக்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் 'அயலான்’  என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த 2 படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்ட உடன் ஒரே மாதத்தில் இந்த இரண்டு படங்களும் முடிவடைந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படங்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயன் 3 இயக்குனர்களை முடிவு செய்து ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க உள்ளதாக தெரிகிறது 
 
இவர்களில் 2 பேர் அட்லியின் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் என்பதும், அட்லியின் இரண்டு உதவி இயக்குனர்கள் தனித்தனியாக கூறிய கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்து விட்டதால் அவர்களது இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது
 
அதேபோல் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதில் ஒரு படத்தை மட்டும் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் மீதம் இரண்டு படங்களையும் சிவகார்த்திகேயனே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு இந்த மூன்று படங்களும் வெளியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்