பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது: எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை

சனி, 22 ஆகஸ்ட் 2020 (18:43 IST)
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று  எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
கடந்த வாரத்தில்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது மனைவியும் பாதிக்கப்பட்டார்.
 
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரையில் உடல் நலம் பெறவேண்டி சினிமாப் பிரபலங்கள் பலரும்  பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
 
இந்நிலையில், இன்று, எஸ்.பி.பிக்கு  வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாக  எம்.ஜி.எம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
 
மேலும், அவருக்கு அமெரிக்க, பிரிட்டன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்