’விஜய்க்கு ஒருநாள் வந்தா’ ... ’நமக்கு ஒரு நாள் வரும்’ : சமுத்திரகனி

சனி, 15 டிசம்பர் 2018 (14:04 IST)
சுப்பரமணியபுரம் படத்தில் எண்ட்ரியாகி இன்று நடோடிகள் படத்தின் மூலம் எல்லா மக்கள் மனதிலும் நின்று ஜொலித்துக்கொண்டிருப்பவர் நடிகர் சமுத்திரகனி ஆவார்.
இவரது நடிப்பில் பெட்டிக்கடை அடுத்து திரைக்கு வர உள்ளது.இந்தப் படத்தை லட்சுமி கிரியேசன்ஸ் தயாரித்துள்ளது. 
 
இயக்குநர் இசக்கி இயக்கியுள்ள பெட்டிக்கடை படத்தில் சமுத்திரகனி புரட்சி சிந்தனை கொண்ட ஆசிரியராக நடிக்கிறார்.
 
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சமுத்திரகனி பேசும் போது: பெட்டிக்கடைகளின் அழிவு அடுத்த தலைமுறையை எப்படி பாதிக்கும் என்பதை இயக்குநர் இப்படத்தின் மூலம் கூறியுள்ளார்.
 
மேலும் இப்படத்தை சர்கார் படத்துடன் ரிலீஸ் செய்யலாம் என என்று இயக்குநர் என்னிடன் கூறினார். அதற்கு நான்: அவர்கள் சர்கார் பற்றி சொல்லுகிறார்கள். நாம் சமூக விரோதிகள் பற்றி சொல்கிறோம். அதனால் சர்கார் ரிலீஸ் ஆகும் தேதியில் இதை ரிலீஸ் செய்ய வேண்டாம். நமக்கு என்று ஒரு தேதி வரும் என்று  இயக்குநரிடம் கூறினேன். படம் நன்றாக வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்