குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலனின் அடுத்த படத்தில் நயன்தாரா!

vinoth

சனி, 27 ஏப்ரல் 2024 (08:44 IST)
விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அந்த படம் தொடங்குவதில் தாமதம் ஆகிக்கொண்டே இருந்ததால் அவர் தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இப்போது அவர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கி இறுதியில் முடிவடைந்தது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் மே மாதம் ரிலீசாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் நித்திலன் அடுத்து நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் சொன்ன கதை நயன்தாராவுக்கு பிடித்து விட்டதாகவும் இப்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்