போட்ட கணக்கு மிஸ் ஆயிடுச்சு… தள்ளிப் போகும் சிம்பு படம்!

வியாழன், 17 டிசம்பர் 2020 (16:13 IST)
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ஈஸ்வரன் திரைப்படம் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி போகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ள ஈஸவரன் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே கட்டமாக முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சுசீந்தர்ன் 26 நாட்களில் படமாக்கி முடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. மாஸ்டர் படத்தை வைத்துதான் திரையரங்குக்கு மீண்டும் ரசிகர்களைக் கொண்டுவர வேண்டும் என்பதால் 1000 திரையரங்குகளுக்கு மேல் அந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இதனால் ஈஸ்வரன் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் எழவே பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்