ஈஸ்வரன் படத்துக்கு இப்படி ஒரு பிரச்சனையா? சிம்புவ திருந்த விட மாட்டாஙக போல!

புதன், 16 டிசம்பர் 2020 (11:24 IST)
நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்துக்கு புதிய ரூபத்தில் ஒரு பிரச்ச்னை எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ள ஈஸவரன் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே கட்டமாக முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது.

சிம்புவின் சினிமா வாழ்க்கையிலேயே மற்ற எந்த படத்துக்கும் இல்லாத சிறப்பு ஈஸவரன் படத்துக்கு உண்டு. அது என்னவென்றால் இந்த படத்தை மொத்தம் 26 நாட்களிலேயே எடுத்து முடித்துள்ளார் சுசீந்தரன். ஆனால் இப்போது அதுவே படத்துக்கு வினையாக வரும் போல இருக்கும் என சொல்லபப்டுகிறது. இந்த படத்தை வாங்க நினைக்கும் விநியோகஸ்தர்கள் 26 நாட்களில் எடுத்தால் அந்த படம் தரமாக இருக்குமா என்று வாங்க அஞ்சுவதாக சொல்லப்படுகிறது. சிம்புவே இப்போதான் திருந்தி படத்தின் ஷூட்டிங்குக்கு எல்லாம் ஒழுங்காக சென்று கொண்டிருக்கிறார். அதற்கும் இப்படி ஒரு முட்டுக்கட்டையா என சிம்பு ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

Source வலைப்பேச்சு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்