அடுத்தடுத்த தோல்வியால் கைவிரிக்கும் நடிகர்கள்… வாரிசு நடிகரை தேடி சென்ற இயக்குனர் பொன்ராம்!

vinoth

வியாழன், 21 மார்ச் 2024 (07:38 IST)
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’. அந்த படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் உருவாக்கிய ரஜினிமுருகன் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

அதையடுத்து பொன் ராம் இயக்கிய எம் ஜி ஆர் மகன் மற்றும் DSP ஆகிய இரு படங்களும் படுதோல்வி படங்களாக அமைந்தன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் இப்போது தயங்குகின்றனர். அதனால் அவர் அடுத்த படத்தை வளர்ந்து வரும் இளம் நடிகரான சண்முக பாண்டியனை வைத்து இயக்க தயாராகியுள்ளார்.

இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. சண்முக பாண்டியன் தற்போது படை தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் பொன்ராம் இயக்கும் படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்