பிசிசிஐ அனுமதிக்காக காத்திருக்கும் நடராஜன்!

செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (12:28 IST)
தமிழக வீரர் நடராஜன் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாட பிசிசிஐ யின் அனுமதிக்காக காத்திருக்கிறார்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் மூலமாக தனது திறமையை நிரூபித்து ஐபிஎல்லில் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியிலும் இடம்பெற்று சாதனை படைத்தவர் நடராஜன். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது தனது மனைவிக்கு குழந்தை பிறந்தபோது நாட்டிற்காக விளையாடுவதை முக்கியமாக கருதி வெற்றியை ஈட்ட உதவிய நடராஜனுக்கு மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இப்போது நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அவர் விளையாட ஆர்வமாக இருக்கிறார். பிசிசிஐ அனுமதி அளிக்கும் நிலையில் அதில் விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்