ரிஷப் பண்ட்டை அவர் போக்கில் விடுங்கள்… ரோஹித் ஷர்மா கருத்து!

வியாழன், 11 மார்ச் 2021 (15:42 IST)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை அவர் போக்கில் விட்டால் அவர் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை விளையாடுவார் என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். இந்நிலையில் அவரை அவர் போக்கில் விளையாட விடவேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘ரிஷப் பன்ட் அபாரமாக விளையாடி வருகிறார். அவரை அவர் போக்கில் விளையாட விட்டால் மேட்ச் வின்னராக ஜொலிப்பார். அவர் மீது தேவையில்லாத பிரஷரை போடுவது தேவையில்லாதது. அவரைப் போட்டியை அனுபவித்து ஆட நாம் நேரம் கொடுக்க வேண்டும். அதை தான் அணி நிர்வாகம் செய்து வருகிறது. ஒவ்வொரு தொடரிலும் அவர் பாடங்களைக் கற்று வருகிறார்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்