கடும் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும் பெங்களூர்… ஆர் சி பி போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறதா?

செவ்வாய், 12 மார்ச் 2024 (08:09 IST)
ஐபிஎல் 2024 சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. முதல் போட்டியே சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ஐபிஎல் அணிகளில் மிகவும் அதிக ரசிகர்கள் உள்ள அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஒன்று. இத்தனைக்கும் இந்த அணி இன்னும் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.

ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களின் சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் போட்டியில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும். ஆனால் இம்முறை அவர்களுக்கு அந்த ரசிகர்களின் ஆதரவு கிடைக்காது போலிருக்காது. ஏனென்றால் இந்த ஆண்டு பெங்களூருவில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் போட்டிகளை அங்கு வைத்தால் அதிகளவில் தண்ணீர் பயன்பாடு இருக்கும் என்பதால், இப்போது ஆர்சிபி அணியின் போட்டிகளை வேறு ஏதேனும் ஒரு மைதானத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்