அழுகுன பழத்தை குடுத்த கருணாநிதி ஏமாத்திட்டார்! – ராமதாஸ் ட்வீட்!

வியாழன், 7 ஜனவரி 2021 (11:51 IST)
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி கேட்டு வரும் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமகவினர் வன்னியர் பிரிவினருக்கு 20% இடஒதுக்கீடு கோரி வரும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இடஒதுக்கீடு கோரி சென்னையில் பாமகவினர் கடந்த மாதம் நடத்திய போராட்டம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ட்விட்டரில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ” 21 உயிர்களைக் கொடுத்து போராடிய வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை கலைஞர் சூழ்ச்சி செய்து கூடுதலாக 107 சாதிகளுக்கு அள்ளிக்கொடுத்தார். நல்ல கனி என்று அழுகிய கனியைக் கொடுத்து ஏமாற்றினார்!” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்