மீனை சைவ உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும்... ஆளுநர் கோரிக்கை..

வெள்ளி, 30 ஜூன் 2023 (18:59 IST)
மீனை சைவ இன பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். 
அப்போது அவர் பேசிய போது மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும் நோய் நொடி இல்லாமல் இருக்கலாம் என்று கூறினார் 
 
நாங்கள் மீனை அசைவம் என்று நினைப்பதில்லை என்றும் சைவம் என்று தான் நினைக்கிறோம் என்றும் மீனை சைவத்தில் சேர்த்தால் மீனவர்கள் இன்னும் பயன் அடைவார்கள் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்