3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் டி.ஜி.பிக்கு உடனே ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு..!

வெள்ளி, 16 ஜூன் 2023 (13:12 IST)
பாலியல் வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு உடனடியாக ஜாமீன் வழங்கிய விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜேபி ராஜேஷ் தாஸ் என்பவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
 
இந்த நிலையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு விழுப்புரம் நீதிமன்றம் உடனே ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 30 நாட்களுக்குள் விழுப்புரம் முதன்மை அமரவு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்