நீங்களா செய்றீங்களா இல்ல நாங்க செய்ய வைக்கனுமா? தமிழக அரசு vs ஐகோர்ட்!!

புதன், 18 நவம்பர் 2020 (13:36 IST)
இன்று மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? என தமிழக அரசு பதில் அளித்துள்ளது. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளும் மெல்ல குறைந்துள்ளது. 
 
திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு மட்டும் இன்னும் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் இன்று மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? என தமிழக அரசு பதில் அளித்துள்ளது. அதில், மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்த டிசம்பர் முதல் வாரத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. 
 
இதற்கு, மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசு முடிவெடுக்காவிடில் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்கும் என  உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்