‘வலிமை’ படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய அஜித்: அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:22 IST)
‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து அஜித் சென்னை திரும்பி உள்ளதாக தெரிகிறது 
 
தீபாவளிக்கு கூட சென்னை திரும்பாமல் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த அஜித் தற்போது படப்பிடிப்பு முடிந்ததும் வீடு திரும்பியுள்ளதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது
 
கடந்த 15 நாட்களாக நடைபெற்ற படப்பிடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் நாயகி ஹூமா குரேஷியுடன் ரொமான்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடப்பதாகவும் இதுவரை நடைபெற்ற படப்பிடிப்புகள் மிகவும் திருப்தியாக இருந்ததாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் மட்டுமே உள்ளதாகவும் ஒரு கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும் இரண்டாம் கட்ட அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டிலும் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘வலிமை’ அப்டேட் மிக விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்