ஃபேஸ் டேக் செயலி மூலம் குற்ற நடவடிக்கைகள் - போலீஸார் கெடுபிடி!

வியாழன், 19 நவம்பர் 2020 (16:02 IST)
ஃபேஸ் டேக் செயலி மூலம் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்கும் முறையை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன், இ.கா.ப., அவர்கள் செயல்படுத்தியுள்ளார். 
 
மாவட்டங்களில் பெருகிவரும் குற்றங்களை தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை  புதிய யுக்திகளை கையாண்டு வருகிறது. ஃபேஸ் டேக் செயலியை திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பணியில் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுபவர்களை கண்டுபிடிக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுப்பட்ட குற்றவாளி பிடிப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்