சாலையோர கடையில் டீ குடித்த எடப்பாடியார்! – வைரலாகும் புகைப்படம்!

வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (13:57 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் சாலையோரம் டீ குடித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தென்காசியில் பிரச்சாரம் முடிந்து புறப்பட்ட முதல்வர் பழனிசாமி செல்லும் வழியில் சாலையோரம் உள்ள தேநீர் கடை ஒன்றை பார்த்ததும் வாகனத்தை நிறுத்த சொல்லி அந்த கடைக்கு சென்று டீ வாங்கி குடித்தார். அவருடன் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரும் உடனிருந்தார். இந்நிலையில் முதல்வர் தேநீர் அருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்