தமிழகத்திற்கு இன்று வரும் 2 லட்சம் கோவிஷீல்டு

வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (10:40 IST)
தமிழகத்திற்கு இன்று மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தடுப்பூசியில் முன்கூட்டியே 20 லட்சம் தடுப்பூசிகளை அவசரமாக வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே, தமிழகத்திற்கு இன்று மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து வருகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்