பேருந்து கண்டக்டரின் கன்னத்தை கடித்த இளைஞர்!

சனி, 23 டிசம்பர் 2023 (20:05 IST)
தெலங்கானா  மாநிலத்தில் அடி சுந்தரவாடா பகுதியில் பேருந்தில், டிக்கெட் எடுத்த அசிம் கான் என்ற இளைஞர், தனக்கு சீட் கிடைக்கவில்லை என தகராறில் ஈடுபட்டு, நடத்துனரின் கன்னத்தை   கடித்துள்ளார்.

தெலங்கானா  மாநிலத்தில்  முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு அடி சுந்தரவாடா பகுதியில்  பேருந்து ஒன்றில்  டிக்கெட் எடுத்தும், சீட் கிடைக்கவில்லை என்பதற்காக கன்டக்டரில்  கன்னத்தை ஒரு இளைஞர்  கடித்து வைத்துள்ளார்.

அடி சுந்தரவாடா பகுதியில் பேருந்தில், டிக்கெட் எடுத்த  அசிம் கான் என்ற இளைஞர், தனக்கு சீட் கிடைக்கவில்லை என தகராறில் ஈடுபட்டு, நடத்துனரின் கன்னத்தை   கடித்துள்ளார்.

அசிமிடம் பணத்தை திரும்ப அளித்த நடத்துனர் அவரை பேருந்தில் இருந்து கீழே இறங்கும்படி கூறியதால் ஆத்திரமடைந்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்