குடியரசுத் தலைவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர்

வெள்ளி, 26 மார்ச் 2021 (21:04 IST)
இந்திய குடியரசுத் தலைவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திரமோடி.

இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு இன்று மதியம் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனால் அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்துக் கேள்விப்பட்ட பிரதமர் மோடி மருத்துவமனையில் குடியரசுத்தலைவரின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்