18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரொனா தடுப்பூசி இலவசம்

புதன், 21 ஏப்ரல் 2021 (22:27 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரொனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கேரளாவில் 10 வயதிறக்கு  மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும்; மாநில அரசுகள் நிதிச்சுமையில் உள்ளதால் மத்திய அரசு கொரோனா தடுப்பூசியை இலவசமாகத் தரவேண்டுமெனவும் கூறியுள்ளார்.

முதல்வரின் அறிவிப்பு அம்மாநில மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்