கோவிந்தா!! கோவிந்தா!! 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறப்பு!

வியாழன், 24 டிசம்பர் 2020 (15:41 IST)
நாளை முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த திருப்பதி தேவஸ்தானம்  கொரோனா லாக்டவுனுக்கு பிறகு திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியோடு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை வைகுண்ட ஏகாதசி என்பதால் உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசன் டோக்கன் வழங்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது புது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாளை முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதன் முறையாக திருப்பதி ஏழுலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்