திருப்பதி ஏழுமலையான் தரிசனம் – அனைத்து வயதினருக்கும் அனுமதி!

சனி, 12 டிசம்பர் 2020 (08:09 IST)
திருப்பதி கோயிலுக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து வயதினரும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கொரோனா லாக்டவுனுக்கு திருப்பதி தேவஸ்தானம் திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியோடு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் கொரோனா பரவல் அச்சம் காரணமாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் முதியவர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையொல் டிசம்பர் 25 முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுவதை அடுத்து அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் இப்போது அதற்கு தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்