தேவையில்லாம மூக்க நுழைகாதீங்க... ரிஹானாவிற்கு லதா மங்கேஷ்கர் பதிலடி !

வியாழன், 4 பிப்ரவரி 2021 (07:49 IST)
விவசாயிகள் பற்றிய ரிஹானாவின் கருத்துக்கு லதா மங்கேஷ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் விவசாய போராட்டம் குறித்த செய்தி ஒன்றை தனது ட்விட்டரில் பகிர்ந்து அது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்  அமெரிக்க பாப் பாடகி ரிஹானா. இவரின் கருத்துக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளனர். 
 
இந்நிலையில் விவசாயிகள் பற்றிய ரிஹானாவின் கருத்துக்கு லதா மங்கேஷ்கர் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, உள்நாட்டு பிரச்சனைகளுக்கு வெளிநாட்டவர்கள் தலையிட கூடாது. இந்தியா தனது உள்நாட்டு பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்ளும் என தெரிவித்துள்ளார். 
 
இதேபோல சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் தேசிய இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டில் வசிப்போர் பார்வையாளர்களாக மட்டும் இருங்கள், பங்கேற்பாளர்களாக மாற வேண்டாம். இந்தியர்களுக்கு இந்தியாவைப் பற்றித் தெரியும் என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்