நடிகரைப் பற்றி துப்புக் கொடுத்தால் 50000 ரூபாய் சன்மானம்!

புதன், 3 பிப்ரவரி 2021 (17:19 IST)
நடிகர் தீப் சித்து குறித்து துப்புக்கொடுத்தால் அவர்களுக்கு 50000 ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என டெல்லி போலிஸார் அறிவித்துள்ளனர்.

2021 ஜனவரி 26-ம் தேதி, கிசான் டிராக்டர் அணிவகுப்பின் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்திலிருந்து ஒரு பகுதி மக்கள் பிரிந்து செங்கோட்டையை அடைந்தனர். அங்கு அவரகள் சீக்கிய மத சின்னங்களையும், காவி சின்னங்களையும், விவசாயிகளின் சங்க கொடிகளையும், வேறு சில கொடிகளையும், செங்கோட்டையின் சுவர்களில் ஏற்றி வைத்தனர். இந்த சம்பவத்தில் தீப் சித்து என்ற நடிகர் ஈடுபட்டதாக பேசப்பட்டு வருகிறது. தற்போது செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் அவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரைப் பற்றிய துப்பு கொடுத்தால் அவர்களுக்கு 50,000 ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என டெல்லி போலிஸார் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்