ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை போட்டு பாப்போம்! – ராஜஸ்தானில் பாஜக முயற்சி!

வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (08:39 IST)
ராஜஸ்தான் சட்டமன்றம் இன்று கூட உள்ள நிலையில் எதிர்கட்சியான பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸின் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலர் இடையே ஏற்பட்ட மோதலால் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வெளியேறுவதாக இருந்தார். ஆனால் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் விளைவாக இருதரப்பினரும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ராஜஸ்தானில் சட்டமன்ற கூட்டத்தில் அசோக் கெலாட் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியான பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால் ராஜஸ்தானின் 200 தொகுதிகளில் 125 காங்கிரஸ் கூட்டணியிடம் உள்ளதால் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்