.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

Sinoj

வியாழன், 7 மார்ச் 2024 (16:19 IST)
விமான ஊழியர்களுடன் தகராறு செய்த பெண் பயணி ஒருவரை  விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட சம்பவம் நடந்துள்ளது.
 
டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்வதற்காக  ஏர் இந்தியா விமானம் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் பிசினஸ் வகுப்பில்  பயணிக்க டிக்கெட் எடுத்திருந்த பெண் பயணி ஒருவர்,  விமான ஊழியர்களுடன் தகாறு செய்தார்.
 
அவர் ஒரு தொழில் நிறுவனத்தில் பணியாற்றும்  மூத்த அதிகாரி என்று கூறப்படுகிறது. இந்த  நிலையில்,  விமானத்தில் இருந்த கேப்டன் தகாறில் ஈடுபட்ட அப்பெண் பயணியை விமானத்தில் இருந்து இறக்கிவிட உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அப்பெண் பயணி விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார்.
 
அதன்பின் ஒருமணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.
 
இந்த சம்பவம் கடந்த 5 ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் நிலையில், விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட அப்பெண் பயணியிடம் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் பெற்றபிறகு வேறொரு விமானத்தில் அவரை அனுப்பி வைக்கப்பட்டார் என தகவல் வெளியாகிறது.
 
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும், கடந்த ஜனவரியில் மட்டும் 894 பயணிகளுக்கு ஏர் இந்தியா விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாவும்,  ரூ.98 லட்சம்   இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்