ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்குவது எப்போது?

திங்கள், 11 டிசம்பர் 2023 (18:48 IST)
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா நாளை தொடங்க இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது 
 
த்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா நாளை தொடங்க இருப்பதாகவும் நாளை மறுநாள் புதன்கிழமை  திருமொழி திருவிழா தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 வைகுண்ட ஏகாதேசியின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 29ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்றும் 30 ஆம் தேதி முதல் சொர்க்கவாசல் திறப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்