சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா

வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (23:09 IST)
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா  கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது முதல் சிறப்பு பூஜைகள் மற்றும்  அலங்கரித்த வாகனங்களில் வீதியுலா  நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்ல நேற்று காலை 7 ஆம் திருவிழா நடைபெற்றது. அப்போது, அலங்கரித்த பல்லக்கில் சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை  மணிக்கு மூங்கில் மண்டபத்தில் சாமிக்கு அஷ்டாபிஷேகமும், இரவு 9;30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று 8 ஆம் திருவிழா நடைபெற்றது. இதில், காலை  மணிக்கு ரேஷ்வரர் வீதியுலாவும், 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும், அலங்கார மண்டபத்தில் வைத்து பெருமாள், சிவகாமி அம்பாளுக்கு அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு  பறங்கி நாற்காலி வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

9 ஆம் திருவிழா நாளை நடக்கிறது.,  காலை 7;30 க்கு தொடங்கும் நிலையில்,  நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ணா காட்சி நடடைபெறுகிறது.

தெப்பத்திருவிழா 30 ஆம் தேதி நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியாகும்,.   இரவு 8  மணிக்கு தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை எழுந்தருளச் செய்து, 3 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தெப்போற்சவம் நடைபெறும்., நள்ளிரவு 12 மணிக்கு திரு ஆராட்டு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்