டி-20 கிரிக்கெட் தொடர்: ஜிம்பாவே செல்லும் இந்திய அணி!

Sinoj

செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (18:15 IST)
வரும் ஜூலை மாதம்  5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட  இந்திய அணி ஜிம்பாவே செல்லவுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2 வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் சம  நிலையில் உள்ள நிலையில்,  3 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இத்தொடரின் பாதியிலேயே  இங்கிலாந்து அணி திடீரென்று துபாய் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், வரும் ஜூலை மாதம்  5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட இந்திய அணி ஜிம்பாவே செல்லவுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலில், டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்த அடுத்த வாரமே 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் விளையாட ஜிம்பாவே செல்கிறது இந்திய அணி.  டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி  ஜூன் மாதம் 29 ஆம் தேதி வரை  நடைபெறவுள்ள நிலையில்,  ஜூலை 6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இந்தியா- ஜிம்பாவே மோதும் டி20 போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்