ஐபிஎல் வரலாற்றில் ரோஹித் ஷர்மா செய்த மற்றொரு சாதனை!

வெள்ளி, 2 அக்டோபர் 2020 (16:20 IST)
மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஐபிஎல் தொடரில் மொத்தமாக 5000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசன் தற்போது நடந்து வருகிறது. அதில் நேற்று மும்பை அணி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. அந்த போட்டியில் விளையாடிய ரோஹித் ஷர்மா 5000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்துள்ளார். இதற்கு முன்னதாக இந்த சாதனையை இந்திய கேப்டன் கோலி மற்றும் ரெய்னா ஆகியோர் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர்.

இதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள மூன்றாவது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். ஏற்கனவே 5 முறை கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றவர் என்ற சாதனையை அவர் தன் வசம் வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்