இந்திய அணியை மீண்டும் வம்புக்கிழுத்த பீட்டர்சன் !

செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (22:22 IST)
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சரித்திரச் சாதனை படைத்தது. இதனால் இந்திய அணி பெரும் மகிழ்ச்சி அடைந்தது. இந்திய இளம் வீரர்களுக்கு உலகளவில் பெரும் பாராட்டுகள் குவிந்தது.

அப்போது  இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன், இந்திய அணியினர் ரொம்ப ஆட வேண்டும். இனிமேல் தான் உண்மையான கிரிகெட் விளையாடவுள்ளனர் என எச்சரித்தார்.

இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதேபோல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள இங்கிலாந்து அணியுடன் மோத தயாராகவுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்றது.

தற்போது, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன், தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் மிந்திய அணியை சீண்டியுள்ளார்.

அதில்,ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதற்காக நீங்கள் கொண்டாட வேண்டாம் என ஏற்கனவே எச்சரித்திருந்தேன்..ஞாபகம் இருக்கிறதா எனக் கேட்டு,இந்திய அணியின் தோல்வியை அவர் விமர்சித்துள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அவர் மீது கடுப்பில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்