கங்குலி குடும்பத்தினருக்கு கொரோனாவா? பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!

ஞாயிறு, 21 ஜூன் 2020 (15:30 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலியின் குடுமப்த்தினர் சிலருக்கு கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேபடனான கங்குலியின் மூத்த சகோதரர் மற்றும் மற்றொரு சகோதரரின் மனைவி ஆகியோருக்கு கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கங்குலியின் அண்ணியின் பெற்றோருக்கும் கடந்த வாரம் கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அவர்கள் நான்கு பேரும் சில உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டதை அடுத்து கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் வந்ததும் அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியானது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்