கொரோனா உச்ச நிலையை கடந்துவிட்டதா பிரிட்டன்?

திங்கள், 27 ஏப்ரல் 2020 (13:56 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பின் உச்ச நிலையை பிரிட்டன் கடந்துவிட்டதாக அந்த நாட்டின் வாராந்திர தரவு சுட்டிக்காட்டுகிறது.
 
பிரிட்டனில் கோவிட்-19 நோய்த்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கடந்த வாரம் சீரான சரிவு ஏற்பட்டுள்ளது.
 
இருப்பினும், “நாம் இன்னும் அபாயத்திலிருந்து மீளவில்லை. நாம் மென்மேலும் எதிர்த்து போராட வேண்டியுள்ளது” என்று இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்