அதில், நடிகர் விஜய்யின் லியோ படத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில், விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, லியோ பட முதல் சிறப்புக் காட்சி காலை 9 மணிக்குத் தொடங்கும் எனவும், கடைசிக் காட்சி நள்ளிரவு 1:30 மணி வரை திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில் விஜய்யின் பெயரை குறிப்பிடும் இடத்தில் தளபதி விஜய் எனக் குறிப்பிடப்பட்டது சர்ச்சையான நிலையில், லியோ பற்றிய புதிய அரசாணையில் விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் வெளியாகியுள்ளது.