ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்சி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணி உத்வேகம் நிறைந்ததாகும். அணியில் திறமையான வீரர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர். இந்த இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக விளங்கும் காலம் விரைவில் வரும்.
இந்த உலக கோப்பையில் என்னுடையக் கருத்துப்படி மகேந்திர சிங் தோனி மற்றும் அவருடைய வீரர் படைகள் அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என நினைக்கிறேன்.