அஸ்ஸாம் நிவாரண முகாம்களில் மக்களை சந்தித்தார் சோனியா
திங்கள், 13 ஆகஸ்ட் 2012 (16:21 IST)
அஸ்ஸாமின் நிலை மாறி மக்கள் வீடு திரும்ப சில காலம் ஆகும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
அஸ்ஸாமில் அண்மையில் இனக்கலவரத்தால் அங்கு வன்முறை வெடித்தது. கலவரத்தில் அங்கு இதுவரை 77 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தும் கலவரம் ஓயவில்லை. இதனால் அஸ்ஸாமின் கோக்ராஜ்ஹர் உள்ளிட்ட தெற்கு மாவட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி முகாமில் தங்கியுள்ளனர்.
முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மற்றும் அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் தருண் கோகாய் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.