பிரியாணியில் புழு இருப்பதெல்லாம் ஒரு புகாரா? அலட்சியம் காட்டிய ஹோட்டல் மீது நடவடிக்கை!

செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:41 IST)
பிரியாணியில் புழு இருப்பதெல்லாம் ஒரு புகாரா என அலட்சியம் காட்டிய ஹோட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
கிருஷ்ணகிரி ஓசூர் சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார் 
 
போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது பிரியாணிக்கு வைக்கப்படும் கத்திரிக்காயில் இருந்து புழு வந்திருக்கலாம் என்றும் பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகாரா என்றும் அலட்சியமாக போலீசாரிடம் பதில் அளித்ததாக கூறப்படுகிறது 
 
இதனையடுத்து போலீசார் ஹோட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர் இந்த சம்பவம் கிருஷ்ணகிரி ஓசூர் சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்